Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அ.தி.மு.க வில் நடக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே அ.தி.மு.க  போராட்டம் – ஸ்ரீரங்கத்தில் டி.டி.வி தினகரன் பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. “அ.தி.மு.க வில் நடப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. அ.தி.மு.க குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் உள்ளது. எனக்கும் சசிகலாவிற்கும் மன வருத்தம் உள்ளது என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் அவர்களின் தரம் என்ன என்பது நமக்கு தெரியும். சந்தர்ப்பவாதத்தையும், நம்பிக்கை துரோகத்தையும் ராஜ தந்திரம் என கூறியவர்கள் அவர்கள். அவர்களின் கருத்துக்கு பதில் கூற முடியாது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம். மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.நீட் தேர்வு விவகாரம், ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் ஆட்சி அமைவதற்கு முன்பாக தி.மு.க என்ன பேசினார்கள் என்பது தெரியும் தற்போது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க வின் சுயரூபம் வெளியே தெரிகிறது.

அ.தி.மு.க விற்குள் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை. அந்த பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே பல்வேறு போராட்டங்களை அறிவிக்கிறார்கள்.ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்ஸை யார் இயக்குகிறார்கள் என்பதை காலம் விளக்கும்.

சசிகலா தன்னை அ.தி.மு.க பொதுச்செயலாளர் என நீதிமன்றத்தில் கூறுகிறார்.அவரை அ.தி.மு.க வில் இணைக்க மாட்டோம் என்கிறார்கள் அது அவர்களின் பிரச்சினை அது தொடர்பாக அ.ம.மு.க கருத்து கூற முடியாது.அ.தி.மு.க வை மீட்டு நல்லாட்சி தருவதே எங்கள் இலக்கு.அதை நோக்கியே நாங்கள் சென்று கொண்டுள்ளோம்.வெற்றி, தோல்வியை கண்டு அஞ்சும் தொண்டர்கள் எங்கள் இயக்கத்தில் இல்லை” என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *