Site Logo mobile
Search Icon
Mobile Gif
Election 2021

அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை – திருச்சியில் பரபரப்பு!!

Advertisement

பாண்டமங்கலம் அருகே அதிமுக வேட்பாளர், மற்றும் அமைச்சரை பிரச்சாரத்தில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சிலர் முற்றுகையிட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவில் அதிமுக சார்பில் போட்டியிடும் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பத்மநாபன் உடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க இன்று மாலை வந்தனர். 

Advertisement

அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் வேட்பாளர் பத்மநாபன் மற்றும் அமைச்சர் வளர்மதியை தெருவின் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக தொண்டர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். மேலும் வேட்பாளரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *