Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி நடைபெற உள்ளது.இப்பயிற்சிக்கான தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்து மத வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
01.07.2025 நிலவரப்படி 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டு பயிற்சி காலம்
சலுகைகள்: ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் திருக்கோயில் சார்பில் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025 மாலை 5:00 மணி வரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620006.
மேலும் தகவல்களுக்கு 94433 98769, 84288 25526 தொடர்பு கொள்ளவும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *