Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

முன்னாள் உணவு மற்றும் நுகர் பொருள்கள் துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசு பதவி தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த விபரங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இன்றைய தினம் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி திருச்சி கே.கே நகர் ஐயர் தோட்டம், 2வது மெயின் ரோடு பகுதியில் உள்ள காமராஜின் நண்பர் பாண்டியன் என்பவரது வீட்டில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலதிபரான இவர் பூதலூரில் அரிசி ஆலை, திருச்சி மாத்தூரில் இன்டஸ்ட்ரீஸ் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் நண்பர் இளமுருகு என்பவருக்குச் சொந்தமான திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலான பிளாசம்ஸ் ஹோட்டலில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காமராஜ் இந்த ஹோட்டலில் பாதி பங்குதாரராக உள்ளார் என்பதும், திருச்சிக்கு வருகை தரும் அதிமுக முக்கிய புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இந்த ஹோட்டலில் தான் தங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *