Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை

முசிறியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குதமிழக அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

திருச்சி குடிநீர் வடிகால் வாரியத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் நடராஜன்.முசிறியை சேர்ந்த இவர்,தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், தலா 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானது என கூறப்படும் ஜெயஸ்ரீ பெட்ரோல் பங்க் ஆகிய இரு இடங்களில்இன்று காலை முதல் விசாரணை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *