Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அனுபவ் தூபே திருச்சிராப்பள்ளி “சாய்சுட்டாபார்” கிளைக்கு வருகை

இந்தியாவின் இளைஞர்களுக்கான ஊக்கம் ஆகிவிட்ட அனுபவ் சாய் சுட்டா பாரின் துணை நிறுவனர் திருச்சிராப்பள்ளிக்கு வந்தார்.நவம்பர் 2024 திறக்கப்பட்ட புதிய ஃபிரான்சைஸ் ஔட்லெட்டின் அதிகாரப்பூர்வ பார்வையிடல் நிகழ்வாக அமைந்தது.

அனுபவ் துபேவின் கதை திரைப்பட கதை போலவே உள்ளது. ஒரு சாதாரண மாணவனாக துவங்கிய பயணம் இன்று இந்தியாவின் பிரபல ஸ்டார்ட்- அப் அமைப்புகள் ஒன்றை தலைமை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. திருச்சியில் சாய் சுட்டா பாரின் துவக்கம் நவம்பர் 2024 நடைபெற்றது. இந்த ஃபிரான்சைஸ் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே மிகவும் பிரபல

முற்றது. இங்கு உள்ள சிறப்பு மண் குவளை தேநீர். எளிதான விலை குறைவாக குறைந்த நேரத்தில் இந்த பிராண்டை இளைஞர்களின் மையமாக மாற்றியவை.அவர் திருச்சியில் சாய்சுட்டா பார் ஃபிரான்சை எடுத்து நடத்தும் நண்பர்களுக்கும் இல்லத்தரசிகளுமான ஸ்வர்ணலதா மகாலட்சுமி அவர்களிடம் அனுபவத்தை தூபே அவர்களது தனது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்

அனுபவ் தூபே கிளையில் இருந்ததால் உற்சாகம் பரவியது. வாடிக்கையாளர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஊடகப் புகழ்பெற்றவர்கள் அவரை வந்து சந்தித்தனர்.இந்த சந்திப்பில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது கூறியவை: நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று திருச்சிராப்பள்ளி போன்ற கலாச்சார நகரத்தில் சாய் சுட்டா பாரின் மணம் பரவியது. மண் குவளை மூலம் இணைகிறோம்.மற்றும் ஒவ்வொரு கிளையிலும் புதிய கனவுகளுடன் இணைகிறோம். தமிழ்நாட்டில் கலாச்சார வேறுபாடு மற்றும் அங்கு உள்ள உணவுப்

 பழக்கம் தேநீரின் நிலை பாரம்பரியமான வட இந்தியா போன்றதல்ல. ஆனால் சாய்ச்சுட்டா பார் இங்கு இளைஞர் பருவத்தின் ருசியை புரிந்து கொண்டு தங்கள் மெனுவில் உள்ளூர் உணவு வகைகளை இணைத்து பிராண்டை மேலும் வலுவாக்கிக் கொண்டு உள்ளது . சாய் சுட்டார் பார் எப்பொழுதும் சமூக சேவைகளுக்கு தங்களது ஊக்கம் காரணமாக பேசப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருளாதார ரீதியில் பின் தங்கி உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. சாயச்சுட்டா பார் விரைவில் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகாவில் மேலும் கிளைகளை திறக்க

 திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது இந்த சாயின் மனம் உலகளாவியது. சமீபத்தில் இந்த பிராண்ட் துபாயில் தங்களது உலகளாவிய கிளையை திறந்துள்ளது. அங்கு இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களும் மண் குவளை தேனீரை ருசியின் ருசியை அனுபவிக்கின்றனர். அதோடு தற்போது சாய் சுட்டா பார் கனடாவில் புதிய கிளையை திறப்பதற்கான தன் திட்டங்களை தொடங்கியுள்ளது. நம் தேநீரை மட்டும்

 கொண்டு வரவில்லை நம் இந்தியாவின் மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் அதன் உணர்வுகளையும் உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதாகவே இருக்கிறோம். என்று கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *