Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இனாம்குளத்தூரில் உள்ள குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குறுதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன்…. ஶ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அவர்களின் துணைவியார் இறப்பிற்கு கட்சிப் பாகுபாடின்றி நான் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன் ஆனால் திமுகவின் உறுப்பினர்களோ முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தாய்மையின் புனிதத்தை கொச்சைபடுத்தி வருகிறார்கள். திமுகவினரை போல் ஆற்று மணலை கொள்ளையடித்தோ,
அடி மனை அபகரித்தோ, கட்டப்பஞ்சாயத்து செய்தோ, வருவாயைப் பெருக்கிக் கொள்ளவில்லை.

மேலும் இனாம்குளத்தூர் பகுதி மக்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இருக்கும் இடத்தில் உள்ள குளத்தை தூர்வாரி நீர் சேமித்து வைக்க வழிவகை செய்யப்படும். அம்மாபோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு கிடைத்திட தொழிற்சாலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.

மாத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய கூலி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *