Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை(13.09.2022) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் ஒன்று, இரண்டு, மூன்று தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நாளை (13.09.2022) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது. எனவே ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம்.

அரியமங்கலம் கேட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பன் நகர், ரயில் நகர், செந்தணீர்புரம், சங்கிலியாண்டபுரம்

பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமான நிலைய பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, கே..சாத்தனூர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்தி நகர், சத்தியவாணி, பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வ நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டி புதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டை மாநகர், கிராப்பட்டி, ஆகிய பகுதிகளில் நாளை (13.09.2022) அன்று குடிநீர் வினியோகம் இருக்காது.

மறுநாள் (14.09.2022) வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *