Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (24.07.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி (23.07.2024) அன்று நடைபெற உள்ளது.

இதனால் நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர் புதியது, மலையப்பநகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மைவீதி, M.K .கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது,

பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காமராஜ் நகர், L.I.C புதியது, L.I.C சுப்பிரமணியநகர், தென்றல்நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் E.B காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணியநகர் புதியது, சுப்பிரமணியநகர் பழையது, ஆனந்தநகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது,

கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் (24.07.2024) ஒரு நாள் இருக்காது. மறுநாள் (25.07.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *