Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பைக்கில் வந்து செயின் பறிப்பு – திருச்சியில் துணிகரம்

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (35). இவர் பீமநகர் கடைவீதி பகுதியில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது இவரை பின்தொடர்ந்த இருவர் டியூக் பைக்கில் வேகமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்திலிருந்த 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மின்னலாய் பறந்து சென்றனர். இதுகுறித்து பாலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் பீமநகர் கடைவீதி பகுதியில் செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *