சாலை பணி முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டியவரை கொலை செய்ய முயற்சி!!

சாலை பணி முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டியவரை கொலை செய்ய முயற்சி!!

திருச்சி- கரூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒப்பந்தத்தின்படி சாலைகள் அமைக்கப்படாமல்,

ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் அல்லூர் சீனிவாசன் என்பவரை டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் வைத்து மர்ம கும்பல் ஆயுதங்களோடு கொலை தாக்குதல் முயற்சி செய்துள்ளனர்.

Advertisement

தாக்குதலில் ஈடுபட முயன்றவர்கள் யார் என்பது குறித்தும், சம்பவம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.