Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகிலேயே அதற்கான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து கடப்பாரையால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி, காவல் ஆய்வாளர் விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *