Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஆட்டோ டிரைவர் இளநீர் வியாபாரி மோதலால் பரபரப்பு

திருவெறும்பூர் அருகே ஆட்டோ டிரைவருக்கும் இளநீர் வியாபாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளநீர் வியாபாரியைதாக்கிய ஆட்டோ டிரைவரை இளநீர் வியாபாரி அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்த்தவர் கோபி இவரது மகன் சாரதி (25) இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.இந்நிலையில் சாரதி நேற்று மதியம் காட்டூர் அம்மன் நகரில் இருந்து கைலாஷ் நகர் பகுதிக்கு ஒரு வழி பாதையில் தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்பொழுது குவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் சஞ்சய் (25) இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் சஞ்சய்.தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ உரசி உள்ளது.

இதனால் சாரதிக்கும் சஞ்சய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாரதி சஞ்சய் முகத்தில் குத்தியுள்ளார். இதில்ஜசஞ்சய்க்கு மண்டை உடைந்தது முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் சஞ்சய் தனது மனைவியுடன் இருந்ததால் சஞ்சய் அருகில் மனைவியை இறக்கி விட்டு திரும்ப தனது

 நண்பருடன் வந்து சாரதியை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இளநீர் சீவும் அருவாளில் வெட்டியுள்ளார்.அதை தடுத்தபொழுது கையில் வெட்டு விழுந்து உள்து மேலும் கண் புருவம், பின் கழுத்து ஆகிய இடத்தில் வெட்டு விழுந்து உள்ளது.இதில் பலத்த காயமடைந்த சாரதி திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.அதேபோல் சஞ்சையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *