Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுதினம்!

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி தன்னுயிரை நீத்த தோழர். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன் தலைமையில் இளைஞர் பெருமன்ற கொடியினை ஏ.ஐ. டி. யு. சி மாவட்டச் செயலாளர் க.சுரேஷ் ஏற்றிவைத்தார்.

இதில் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, இளைஞர் பெருமன்றம் நிர்வாகி விஷ்வா, குணசிங் உள்ளிட்டோர் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேற்குப் பகுதி  பாண்டமங்கலம் அரச மரத்தடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காஜா தலைமை வகித்தார். இதில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் கொடியேற்றி வைத்தார்.மேலும் மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க.இப்ராகிம் உறுதிமொழி வாசித்தார்.

மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, சந்திர பிரகாஷ், ரவீந்திரன், ஆனந்தன், சரண் சிங், மௌலானா, ஜான் பாஷா, ராமமூர்த்தி, ரபீக், ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம் தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தர்மா தலைமை வகித்தார். காஜா கொடியேற்றி வைத்தார்.

இதில் மாணவர் பெருமன்ற  மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்லானி கலந்து கொண்டார். 23 வது வார்டு குறத்தொரு பகுதியில் கிளைச் செயலாளர் க.முருகன் தலைமையில் பகத்சிங் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோ.அபிஷேகபுரம் பகுதி குழுவில் எடமலைபட்டிபுதூர் கிளையின் சார்பில் கிளை செயலாளர் ட. நல்லு தலைமையில் கட்சி கொடியினை மூத்த ஏ.ஜி.பிரான்சிஸ் கொடியேற்றிவைத்தார்.  மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, பகுதி செயலாளர் ஏ. அஞ்சுகம் உள்ளிட்டோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் ஜி.ஆர்.சரவணன், ஆர்.முருகேசன், ரொசாரியோ.ஆர்.அசோக், மோகன், டி.வி.செந்தில், முத்தம்மாள், மாரியாயி, செந்தில், டி.அசோக், மகேந்திரன்,ரெங்கசாமி,ஜான் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டார்கள். கிழக்கு பகுதியில் கல்யாணசுந்தரபுரத்தில் கே.கே.முருகேசன் தலைமையில் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *