Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருவானைக்காவலில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை அக்ரஹாரத்தில் வசிப்பவர் குமார் வயது (62) ). இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை சென்னையில் ஒரு நிறுவனத்தில் சேர்த்து விடுவதற்காக சென்றிருந்தார்.

நேற்று புதன்கிழமை மதியம் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த செயின், மோதிரம், வளையல், நெக்லஸ் உட்பட 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. ஆனால் பீரோவில் தனியாக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் பணம் மட்டும் இருந்துள்ளது. 

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *