திருச்சியில் தொடரும் கஞ்சா கும்பலின் அடாவடி - பொதுமக்கள் அலறல்!!

திருச்சியில் தொடரும் கஞ்சா கும்பலின் அடாவடி - பொதுமக்கள் அலறல்!!

திருச்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சிறு வயது இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி அடாவடியாக பல வன்முறையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

திருச்சியில் இதோடு மூன்றாவது முறையாக
பிராட்டியூர் அருகே இனியானூர் செல்லும் சாலையில் இரு நபர்கள் கத்தியை காட்டி வரக்கூடிய பொது மக்களிடம் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டனர்.

Advertisement

பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களில் 2 பேரை பிடித்து கட்டிவைத்து தற்போது போலீசிடம் ஒப்படைத்தனர். இருவரும் கஞ்சா பழக்கமுள்ளவர்கள் எனவும் போதையில் இருந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் தப்பி விட்டதாகவும் அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் ..

திருச்சி சோமரசன்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா போதை பழக்கத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் சாலையில் வருகின்ற பொதுமக்களிடம் மிரட்டுவது தொடர்கதையாகி வருவதால் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..