Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கார் விபத்து திருச்சியை சேர்ந்த ஓட்டுநர் பலி – தாய் மற்றும் மனைவி படுகாயம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே கொணலை பகுதியில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து சாலையோ தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சுரேஷ் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த சுரேஷ் மனைவி, மற்றும் அவரது தாய் லேசான காயங்களுடன் இருங்களூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த வந்த சிறுகனூர் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தினைச் சேர்ந்த இவர்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *