Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய பேருந்து நிலையம் அருகே கவிழ்ந்த கார் – மது போதையால் விபரீதம்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள கடையில் மது அருந்தி விட்டு அவருடைய காரில் புறப்பட்டார்.

மத்திய பேருந்து நிலையம் அருகே ரோஷன் மஹால் வழியாக சங்கம் ஓட்டல் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மது போதை தலைக்கு ஏறியதால் அங்கு இருந்த அடுக்குமாடி குடியிருப்பு பக்கவாட்டு சுவரில் மோதி கார் வலது பக்கமாக சாய்ந்தது.

இதில் கார் உரிமையாளரான மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அந்தப்பகுதியில் எதிரே மற்றும் பின்புறம் வாகனம் வராததால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தெற்கு போக்குவரத்து விபத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *