Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விளைபொருட்களை கையில் ஏந்தியும், மாலையாக அணிந்து விவசாயிகள் நூதன போராட்டம்

விளைபொருட்களை கையில் ஏந்தியும், மாலையாக அணிந்து விவசாயிகள் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும், திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோறையாற்றில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதன் மாவட்ட தலைவர் ம.ப சின்னதுரை தலைமையில் காய்கறிகள், நெல், பயிறு போன்ற தானியங்கள், பூ செடிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களுடன் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காய்கறிகள், பூ செடிகள், பழங்கள், பால் உள்ளிட்ட விவாசாய பொருட்களுடன் திரண்ட விவசாயிகள் கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப சின்னத்துரை… மேகதாதுவில் கர்நாடக அரசு கண்டிப்பாக அணையை கட்டியே தீருவோம் என்று உறுதியாக உள்ளது. இதனை தடுக்க எதிர்கட்சிகள் மட்டும் அல்ல ஆளும் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போராடியது போல் ஒன்று கூடி போராடி அழுத்தம் தர வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக ஐந்து பவுனுக்கு கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெற்றால் அதை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அதை செய்ய முடியும் என்று மாற்றி கூறிவிட்டனர். எனவே ஐந்து பவுனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடனை எவ்வித நிபந்தனையுமின்றி ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *