Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று (07.12.2022) காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் பா.ஜ.க முன்னிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பின்னர் இழுபறி நிலை நீடித்தது. 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 38 இடங்களில் முன்னணியில் இருந்தது.

பா.ஜ.க 27 இடங்களில் முன்னணியில் இருந்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்தனர். எனவே இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது. பா.ஜ.க-விடம் இருந்த இமாச்சல் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதனால் இமாச்சலில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் வெற்றியை கொண்டாடும் வகையில் திருச்சி நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மாநில பொது செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வக்கீல்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் வக்கீல் முத்துகிருஷ்ணன், வக்கீல்கள் முருகையா,

அஸ்வின், வனஜா, சிவகாமி, ரமணன், கோகுல், நோபல்போஸ்,மேத்யூ, விக்னேஷ், பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் பிரியங்கா பட்டேல், அபு, பஜார் மைதீன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *