Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி வருகை புரிந்த முதலமைச்சர் – ஜங்ஷன் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள  ராஜீவ்காந்தி சிலைக்கு  முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சேலம், கோவை மாவட்டங்களை தொடர்ந்து  இன்று திருச்சியில் ஆய்வு மேற்கொள்ள வருகைபுரிந்த முதலமைச்சர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு முதலமைச்சர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அரசு விருந்தினர்  விடுதியில் ஆட்சியர் மருத்துவர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.NIT கல்லூரியில் கொரோனா  தனிமைப்படுத்தப்பட்ட முகாமை தொடங்கி வைக்கிறார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *