மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள், திருச்சிராப்பள்ளி மேலபுதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முன்னாள் படைவீரர்களின் நலனைக் காக்கும் வகையில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மறுவேலை வாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் கீழ், வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 13 முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கி கடன் அனுமதி பெற்று, தொழில் முனைவோர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு முதல்கட்டமாக 19.08.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நேரில் மூலதன மானியத் தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்கினார். தொடர்ந்து, மீதமுள்ள 9 பேருக்கு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (29.08.2025) மானிய உதவியை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பிலான மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தவே. சரவணன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மாவட்ட நகர ஊரமைப்புக்குழு உறுப்பினர் க. வைரமணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தி. சு.ப சங்கர் ராஜா, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments