Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காந்தி மார்க்கெட் மறு உத்தரவு வரும் வரை மூடல் – ஆணையர் உத்தரவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேற்படி வியாபாரம் மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை கீழ்புறம் இரவு மொத்த வணிகமும் மேல்புறம் சில்லறை வணிகம்  காலை 06.00 மணி முதல் 10.00 வரை 16.05.2021 இரவு முதல் மறு உத்திரவு வரும் வரை நடைபெறும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *