Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மாரடைப்பால் அரசு பேருந்திலேயே மரணமடைந்த நடத்துனர் – திருச்சியில் பரிதாபம்!!

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(45).இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இன்று பணிக்கு செல்ல எடமலைப்பட்டிப்புதூர் பஸ் டிப்போவிலிருந்து பேருந்தை எடுத்து விட்டு மத்திய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்ற சென்றுள்ளார்.

Advertisement

அப்போது அரிஸ்டோ ரவுண்டானா அருகே பேருந்து வந்த போது ஆறுமுகத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.பேருந்தின் ஓட்டுனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை எடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்று ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

Advertisement

அப்போது நடத்துனர் ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.இச்சம்பவம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *