சதி வேலையா? 2வது முறையாக தீப்பிடித்த காந்தி மார்க்கெட்! போலீஸ் விசாரணை!!

சதி வேலையா? 2வது முறையாக தீப்பிடித்த காந்தி மார்க்கெட்! போலீஸ் விசாரணை!!

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. காந்தி மார்க்கெட்டை திறந்துவிட வேண்டும் என வியாபாரிகள் ஒருபக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் காந்தி மார்க்கெட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது‌.இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது 6ம் நம்பர் கேட் அருகே கடைக்கு முன் போடப்பட்டிருந்த பந்தல் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து திருச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது ஒருபுறமிருக்க கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தீ பற்றி எரிந்தது இந்நேரத்தில் பதிவு செய்கிறோம். சென்ற முறை நடந்ததீ விபத்து காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்ற வேலையில் நேற்று மறுபடியும் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டிருப்பதால் பெரிய அளவிலான பொருள் சேதம் எதுவும் இல்லை.

Advertisement

தகவலறிந்து சில வியாபாரிகள் தங்களது கடைகளை சென்று பார்த்தபோது 20க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு எலக்ட்ரானிக் தராசு, புதிய ரூபாய் நோட்டுகள், எடைக்கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்தும் கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க தயாராகி உள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் பூட்டிய கடைகளை திறக்க வைப்பதற்காக யாரேனும் திட்டமிட்டு இதை செய்தார்களா? அல்லது எதிர்பாராத இந்த தீ விபத்தா? அல்லது இப்படி செய்து கொண்டே இருந்தால் மணிகண்டம் காந்தி மார்க்கெடாக மாறுவதற்கு செய்தார்களா? என போலீசார் ஒருபுறமும் வியாபாரிகள் ஒருபுறமும் தவித்து வருகின்றனர். மாநகராட்சி உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.