Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத்தலைவர்கள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள இலால்குடி மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஐந்து ஊராட்சி 
மன்றத்தலைவர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான 
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று (31.08.2021) நடைபெற்றது. 

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாவட்ட 
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.பிச்சை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌ.கங்காதாரிணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பி.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *