Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கருணை இல்லத்தில் கொரோனா – பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டது

திருச்சியில் 5 ஆயிரத்தை தாண்டி கொரோனா நோய் பாதிப்புகள் சென்று கொண்டே உள்ளது. இதில் மாநகராட்சியின் 25க்கும் மேற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் பகுதியில் ஆதரவற்றோர் வாழும் கங்காரு கருணை இல்லம் உள்ளது. அங்குள்ள சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்களால் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.

Advertisement
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *