Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முதலமைச்சரின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி

திருச்சி துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் இந்திரா காந்தி. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் துறையூர் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

Advertisement

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அவருடைய கணவருக்கு கொரோனா  தொற்று உறுதியாகியிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 30-ஆம் தேதி திருச்சி மரக்கடையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது அந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இந்திரா காந்தியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சியில் போட்டியிடும் அதிமுக சக தொகுதி வேட்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி தான் துறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *