திருச்சியில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று- சமயபுரம் காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா!!

திருச்சியில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று- சமயபுரம் காவல் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அடுத்ததாக நகர்ந்து வந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. திருச்சியில் இதுவரை பத்தாயிரத்தை கடந்து கொரோனா தொற்று அதிகரித்து கொண்டுள்ளது . இதில் 9ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 142 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பரிசோதனை முகாம் திருச்சி வார்டுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ ஜெயசீலன் உள்ளிட்ட 4 போலீஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மற்ற காவலர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.