Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர அடிக்கல் நாட்டிய பூங்காவை அபகரிக்க முயலும் கவுன்சிலர்: மக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் வசதிக்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கு ரூ.48.85 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அப்போது அந்த பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் பூங்கா அமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் எனக் கூறி உடனடியாக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பூங்காவை கட்ட வேண்டும் என வலியுறுத்தி சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று புத்தூர் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சண்முகா நகருக்குட்பட்ட 25 வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை அபகரிக்க முயல்கிறார். அதனால் தான் பூங்காவை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்துகிறதே என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உடனடியாக அங்கு மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *