Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காட்டுப்பன்றி கடித்து தாக்கியதில் மரணம்- உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, உத்தமர்சீலி கிராமத்தில் 11.08.2025 அன்று மதியம் விவசாய நிலத்திற்கு சாகுபடி பணியில் பாம்பு (எ) கணபதி (வயது 74 ) என்பவர் ஈடுபட்டுயிருந்த போது காட்டு பன்றி தாக்கியதில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 13.08.2025 காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார். தொடர்ந்து காட்டு பன்றி தாக்கி விவசாயிகள் அந்த பகுதியில் காயமடைந்து வருவது தொடர் கதையாகியுள்ளதையும் வனத்துறை கண்டுக்கொள்ளாத்தாலும் விவசாயிகள் காட்டுபன்றிகளின் தாக்குத்தலுக்குள்ளாவதற்கு முடிவுகட்டிடவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைத்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்
அறிவிப்பு வெளியிட்டு தற்பொழுது உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான காட்டு பன்றிகள் உள்ளதா விவசாயிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களும் வயில்களில் நடந்து செல்ல மிகுந்த அச்சத்துடன் உள்ளன உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வனத்துறை இடம் பன்றிகள் அனைத்தையும் பிடிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *