Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இருசக்கர வாகனம், சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டித்தும், மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.ஜவஹர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துனை தலைவர் சுஜாதா, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளிதரன், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் வில்ஸ், முத்துக்குமார், கோபாலகிருஷ்னன், மகேஷ் கங்கானி வக்கீல் செந்தில்நாதன், கிரேசி உள்பட ஏராளமானர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *