திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றையதினம் திறந்துவைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடியபோது திரைப்படங்கள் பற்றியும் பேசினார்.
அப்போது தியேட்டரில் சென்று திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றித்தருவதாக டிஐஜி வருண்குமார் உறுதியளித்தார்.உடனே அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர்களை சந்தோசத்தில் ஆழ்த்த மறுநாளேஆதரவற்ற குழந்தைகள் மற்றும் காப்பாளர்கள் என 60 பேரை தனது சொந்தசெலவில் திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்துவந்தார்.
முதன் முறையாக தியேட்டரில் படம் பார்க்கபோகும் உற்சாக மிகுதியில், முகமலர்ச்சியுடன் பிஞ்சு குழந்தைகள் வருகை புரிந்திருந்தனர்.திரைப்படத்திற்கு அவர்களை அழைத்து வந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வாங்கி தருவேன் என்று உறுதி அளித்ததை மறுநாளே செய்து காண்பித்தார்.
அவர்கள் விழாவில் கேட்டதின்படி பொம்மைகள் விளையாட்டுப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்களை வாங்கிவந்து அவர்களுக்கு வழங்கி மேலும்உற்சாகப்படுத்தி, அவர்களின் புன்னகையில் மெய்மறந்து சிரித்துமகிழ்ந்தார் டிஐஜி வருண்குமார்.
தொடர்ந்து குழந்தைகளின் தோளில் கைபோட்டு அவர்களை அழைத்துச்சென்றதுடன், தங்களது ஆசையை நிவர்த்தி செய்த டிஐஜி யின் கரங்களை ப் பிடித்து நன்றி கூறியவாறு இருக்கையில் அமர்ந்த சிறுவர்களுடன் தானும் அமர்ந்து திரைப்படத்தை ரசித்து மகிழ்ந்தார் டிஐஜி வருண்குமார்.
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் என்றும் இருக்குது… என்பது போல மற்றவர்களை மகிழ வைத்து தானும் மகிழ்ந்த டிஐஜி வருண்குமார் காக்கிக்கு காக்கும் பணியை விட கரம் நீட்டி கனிவு காட்டவும் தெரியும் என்பதை சைலன்டாக விளம்பரப்படுத்தாமல் செயலில் காண்பித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments