Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

300 துப்புரவு பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் விநியோகம்

தொழிலாளர் துறையின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் பயன்பெறும் வகையில் கிட்டத்தட்ட முந்நூறு முறைசாரா துப்புரவு தொழிலாளர்கள் தொழில்சார் அடையாள அட்டை வழங்கப்பட்டன.

 அவர்களின் பெரும்பாலான பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கவுன்சிலர்கள் மற்றும் மகளிர் துப்புரவு பணியாளர்களுக்கு இடையே சிட்டி வைடு இன்க்ளூசிவ் சானிட்டேஷன் (CWIS) நடத்திய சர்வதேச மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.

 துப்புரவு பணியாளர்கள் எதிர்நோக்கும் கோரிக்கைகள் மற்றும் தேவை குறித்து கவுன்சிலரிடம் பகிர்ந்து தீர்வு காணப்பட்டது.

 கல்வி உதவி முதல் விபத்து நிவாரணம் வரை துப்புரவு பணியாளர்கள் தங்கள் வார்டுகளில் திருமணங்கள், கல்வி செலவுகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு நிதி உதவி பெறலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம் என வாய்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் அம்பலவாணன் கூறியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *