இன்று (09.08.2025)திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்லநாகரெத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காலல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள் சம்மந்தமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இக்குறைதீர்ப்பு முகாம் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். ஏனெனில், அனைத்து காவல் அலுவலர்கள் ஒரு இடத்தில் கூடி விசாரணை மேற்கொள்வதன் காரணமாக பொதுமக்களுக்கு, தீர்வு விரைவாக கிடைக்கிறது. இதேபோல் திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் பணமோசடி தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ள நிலையில் இன்று (09.08.2025) மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. பழனியப்பன் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 25 மனுதாரர்கள் இன்று ஆதராக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் 19 மனுதாரர்கள் ஆஜராகி உள்ளனர். அதில் 10 மனுக்கள் முடிக்கப்பட்டது. 9 அணுக்கள் மறுவிசாரணைக்காக அனுப்பப்பட்டது. 4 மனுதாரர்கள் வரவில்லை.
இதேபோல் திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் நிலமோசடி தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ள நிலையில். இன்று (09.08.2025) மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் கூடும் காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. கதிரவன் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 70 மனுதாரர்கள் இன்று ஆஜர் ஆக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் 38 மனுதாரர்கள் ஆஜராகியுள்ளனர். அதில் 26 மனுக்கள் முடிக்கப்பட்டது. 12 மனுக்கள் மறுவிசாரணைக்காக அனுப்பப்பட்டது. 32 மனுதாரர்கள் வரவில்லை.
மேற்படி ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாமை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம் இ.கா.பா. கண்காணித்து, பொதுமக்களின் குறைகளை விரைவில் களைய, காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
Comments