Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் – கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேமுதிகவினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இன்று காலை விமான நிலையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின், மலைக்கோட்டை, பபாலக்கர, ஜங்ஷன், பொன்மலை, அரியமங்கலம் பகுதி, துவாக்குடி நகரம், சூரியூர் ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் கழக கொடி ஏற்றிய ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கியும், சிறுவர்களுக்கு நோட்டு பென்சிலும் வழங்கப்பட்டது.

இதில் மாநில இணையதள அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் , அவைத் தலைவர் ஜெயராமன் , பொருளாளர் மில்டன் குமார் , மாவட்ட துணைசெயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், ராஜ்குமார், விஜய சுரேஷ் , பெருமாள், அய்யப்பன், லோகராஜ், பாண்டியன், தமிழ், பகுதி செயலாளர்கள் வெங்கடேசன், சங்கர், குமார், அலெக்சாண்டர், அருள்ராஜ், மணிகண்டன், மோகன்‌ உள்ளிட்ட நிர்வாகிகளும், மகளிர் அணி இந்துமதி, பிரியா, கிருபா, நிஷா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் ஊராட்சி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்‌.

முசிறி, தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், காட்டுப்புத்தூர், எலூர்பட்டி, கரட்டுப்பட்டி, நத்தம், குறிஞ்சி நகர், கார்த்திகை பட்டி, தேவதானம், தண்டலை புத்தூர், தெற்கு பாஞ்சாம்பட்டி, நாச்சம்பட்டி, கைகாட்டி உள்ளிட்ட பகுதியில் தேமுதிக கட்சியினர் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சிவகுமார் வனஜா, செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம், முசிறி நகர செயலாளர் கவுன்சிலர் சுந்தர்ராஜன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், சந்தோஷ், விஜய்சேகரன், ரவிக்குமார், பாக்யராஜ், சிவமணி,

பேரூர் செயலாளர் அர்ஜுனன், மகாமுனி, தொட்டியம் மேற்கு ஒன்றிய கழக பொருளாளர் திருஞானசம்பந்தம், ராமர், மாவட்ட பிரதி சதீஷ், கிழக்கு ஒன்றிய இளைஞரணி முசிறி நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம், சண்முகம், மாவட்ட பிரதிநிதி அவை தலைவர் பாலன் மற்றும் தொட்டியம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி செயலாளர் கரட்டுப்பட்டி கே.ஆர்.கே குமார் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோ கலந்து கொண்டனர்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *