Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி புத்தாநத்தத்தில் கொடி கம்பத்தினை அகற்றும் போது திமுக பிரமுகர் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளைத் தொடர்ந்து கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைவீதி பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தினை அகற்றும் பணியில் கட்சியினர்  ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு உதவியாக திமுக பிரமுகர்

முஸ்தபா மகன்  ரஷீதுஅலி(32) என்பவர் உதவி செய்துள்ளார். அப்போது குழியில் இருந்து அகற்றிய கொடி கம்பம் அருகில் மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் வயரில் சிக்கியதில் ரஷீது அலி மீது  மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினரால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ரஷீது அலி ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளர். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *