Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமூக நீதிக்கான திராவிடப் பொங்கல் விழா: திருச்சியில் மாபெரும் சைக்கிள் போட்டி!

திருச்சி மாநகர கழகம் சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி
திராவிடப் பொங்கல்
சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டம் மாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.


போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்
மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வில் மாநகர கழக நிர்வாகிகள் B.A.நூர்கான், M.தமிழ்செல்வம் ,சந்திரமோகன்,
பொன்செல்லையா, சரோஜினி,
பகுதி கழகச் செயலாளர் RG.பாபு மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பகுதி கழகச் செயலாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சைக்கிள் போட்டிகள் கீழ்கண்ட வயதினருக்கு ஆண்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை
பெண்கள் 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம் இரண்டாவது பரிசு 7500 மூன்றாவது பரிசு 5000 போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *