திருச்சி மதுக்கடைகளில் அலைமோதி குவியும் மதுப்பிரியர்கள்

திருச்சி மதுக்கடைகளில் அலைமோதி குவியும் மதுப்பிரியர்கள்

வரும் (10.05.2021)திங்கட்கிழமை முதல் (24.05.2021) வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது 
ஏற்கனவே தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபானம் அருந்துபவர்கள் அதிக அளவில் கடைகளுக்கு வர துவங்கி விட்டனர். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மறுபுறம் அயல்நாட்டு மதுபான வகைகளை விற்கும் (எலைட்) கடைகளிலும் மது விரும்பிகள் கைகளில் பைகளை வைத்துக்கொண்டு பை மூட்டையாகவும், டப்பாக்களில் எடுத்து செல்லும் காட்சிகளை காண முடிகிறது.

 
ஒருவரே அதிக அளவிலான மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.14 நாட்கள் மூலம் முழுமுடக்ககம் என்பதால் மதுபாட்டில்களை வாங்கி குவிக்கும் எண்ணத்தில் மதுப்பிரியர்கள் கடைகளை நாடி உள்ளனர். முக கவசம் அணிந்து அனைவரும்  வந்து உள்ளனர். தனிமனித இடைவெளி இல்லாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்கள் வாங்கும் நிலை தான் உள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon