Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

80 அடி ஆழ கிணற்றில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு

 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுப்பத்தூர் ஊராட்சியில் உள்ள வடக்கு சாலப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57). இவர் திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மின் மோட்டார் பழுது பார்ப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது அவரது காலில் மின் ஒயர் சிக்கியுள்ளது.

இதில் நிலை தடுமாறிய பாலசுப்ரமணியன் 80 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இது குறித்து சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், பிரான்சிஸ் அலெக்சாண்டர், பெரியசாமி, தர்மராஜா, வெங்கடேஷ், விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தவறி விழுந்த பாலசுப்ரமணியனை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *