Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் காலி மனைகள் சுகாதார அபாயம் – உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், திருவரம்பூர், பொன்மலை மற்றும் கோஅபிஷேகபுரம் வார்டு குழு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.மேலும் காலி மனைகளில் பயனற்ற நிலையில் உள்ள டயர்கள், காலிபிளாஸ்டிக் டப்பா, கொட்டாங்குச்சி மற்றும் உடைந்த மண் பானைகள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களும், முட்புதர்களும் மண்டிகிடப்பதால் விஷஜந்துக்கள் மற்றும் பாம்புகள் பதுங்கும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளதால், காலிமனை உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து தேங்கியுள்ள மழைநீர், முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்பட காரணமாக உள்ள காலிமனை உரிமையாளர்களின் விவரங்கள் வார்டு வாரியாக பெற்று தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 இன் கீழ் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *