Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

செல்போன் வாங்கித் தராததால் இன்ஜினியரிங் முடித்த மாணவர் தற்கொலை

திருச்சி பெரியமிளகுபாறை கள்ளர் தெருவை வசித்து வருபவர் ஞானவேல் – புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இளைய மகன் தமிழ்ச்செல்வன் (19) என்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் புதிதாக செல்போன் கேட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்ச்செல்வனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், வீட்டின் பின்புறம் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று பார்த்த தமிழ்ச்செல்வனின் அக்கா தமிழ்ச்செல்வன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *