Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தில் 33 அங்காடிகளுடன் நடந்த “தொழில்முனைவோர் தினம்”: மாணவர்கள் உற்சாக பங்கேற்பு.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, இந்திரா கணேசன் கல்விக் குழுமம், 02.09.2025 அன்று “தொழில்முனைவோர் தினம்” என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி, மாணவர்களில் தொழில்முனைவுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, சித்தா மருத்துவக் கல்லூரி மற்றும் கலை & அறிவியல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கல்லூரி இளம் மாணவர்களை ஒருங்கிணைந்து புதுமையான யோசனைகளை பகிர்ந்து கொள்ளவும், மாணவர்களின் தொழில்முனைவுத் திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியின் துவக்க விழா, கல்விக் குழுமச் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா, மற்றும் பல்வேறு கல்லூரி முதல்வர்களால் சிறப்பிக்கப்பட்டது. அவர்கள் தொழில்முனைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்கள் புதுமை, படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, 33 உணவு மற்றும் புதுமை அங்காடிகள் நடத்தப்பட்டன.


மாணவர்கள் வணிகத் திட்ட அறிக்கைகள், புதுமையான யோசனை அறிமுகங்கள், உணவு மற்றும் தயாரிப்பு அங்காடிகள் அமைப்பதன் நுணுக்கங்கள், ஆகியவற்றில் அனுபவம் பெற்று நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும், மாணவர்கள் தங்களின் தொழில்முனைவுத் திறன்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் குழுத் திறன் குறித்த நடைமுறை அனுபவத்தையும் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் கே. சித்ராதேவி, முதல்வர் அலைடு ஹெல்த் சயின்ஸ், முனைவர். டி. ஸ்ரீராம், முனைவர். ஆர். பாரத்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *