Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.3000 பணம் பறிப்பு – கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியின் கூட்டாளிகள் இரண்டு பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (45 ). இவர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அரியமங்கலம் காமராஜர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த பஷீர் முகமது மகன் முபாரக் அலி (31) அவனது நண்பன்

சேலம் பழைய குமாரமங்கலம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (23) ஆகிய இரண்டு பேரும் இன்று காலை மாரியப்பன் இளநீர் கடைக்கு வந்து தனது அண்ணன் கொம்பன் ஜெகன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு ஓராண்டுகள் முடிந்து விட்டது. 

தற்பொழுது தாங்கள் தான் ரவுடி என்று கூறியதாகவும் அதே போல்சந்தோஷ் சேலத்தில் தன்னை கேட்டால் எல்லாரும் பயப்படுவார்கள் எனக்கூறி மாரியப்பனிடம் மாமுல் தங்களுக்கு இனி நீ தர வேண்டும் என கூறி ரூ.5000 பணம் கேட்டுஉள்ளனர். அதற்கு மாரியப்பன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3000 பணத்தை முபாரக் அலியும் சந்தோசம் பறித்த பொழுது பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பொழுது அவர்களையும் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மாரியப்பன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முபாரக் அலி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை செய்து செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *