Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தீபாவளி பலகாரசீட்டு நடத்தி 73 லட்சத்துடன் எஸ்கேப் ஆன குடும்பம் – ஏமாந்தவர்கள் எஸ்பியிடம் கதறல்

திருச்சி மாவட்டம், துறையூர் வேங்கடத்தானூர் பகுதியை சேர்ந்த மிட்டாய் வியாபாரம் செய்துவரும் ஆனந்தன் என்பவர் அப்பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பலகார சீட்டு வசூல்செய்து நடத்திவந்தார்.

இதனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் ஆனந்தனிடம் தீபாவளி பலகாரசீட்டு செலுத்திவந்தனர், மாதம் 500 ரூபாய் வீதம் 12 மாதங்கள் பணம் செலுத்தியிருந்தனர். ஒவ்வொருத்தரும் தலா இரண்டு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் என தங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடமும் தீபாவளி சீட்டு வசூல்செய்து ஆனந்தனிடம் நேரடியாக கொடுத்துவந்தனர்.ஒருகட்டத்தில், தீபாவளி பலகார சீட்டு முழு பணத்தையும் கடந்த 16ஆம் தேதி தருவதாக ஆனந்தன் தெரிவித்த நிலையில், அன்று ஆனந்தன் வீட்டுக்கு சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, ஆனந்தன் வீட்டில் பூட்டிவிட்டு குடும்பத்தினர் அனைவருடனும்
சுமார் 73,36,000 ரூபாய் ஏமாற்றிவிட்டு குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானார்.இது தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 38 பேரும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட 12 குடும்பத்தினர் இன்று திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், இழந்த பணத்தை மீட்டுதரகோரியும், மோசடியில் ஈடுபட்ட ஆனந்தன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்களிடம் புகார் அளித்தனர். நம்பிக்கையின்பேரில் சிறுக சிறுக சேர்த்த பணம் முழுவதையும் இழந்து ஒன்றும் இல்லாமல் இருக்கிறோம் என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *