Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடிகர் ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய ரசிகர்கள்

திருச்சி ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றம் மற்றும் ரசிகர்கள் இணைந்து திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசம் வழங்கினர்.

இந்நிகழ்வை திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் துவக்கி வைத்தார். மேலும் திருவெறும்பூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளார் DS.சரவணன் மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை, அருண், பசுபதி ஆகியோர் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து திருவெறும்பூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளார் சரவணன் கூறுகையில்… கொரானா தொற்றால்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 
தேவராயநேரி Dr.APJ.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஊரடங்கால் பாதிக்கபட்டுள்ள சாலையோர ஆதரவற்ற மக்களுக்கும், கொரானா தடுப்பில் உள்ள கள பணியாளர்களுக்கும் தேவராயநேரி முதல் திருவெறும்பூர் வரை  மன்றத்தின் சார்பாக தினமும் 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *