Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இருபதாவது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் வேண்டும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது . 

கரூர் பைபாஸ், மலர் சாலையில் உள்ள இச்சங்கத்தின் மாநில தலைவர் இல்லத்தில் நடைபெறும் இப்போராட்டம் இருபதாவது நாளாக இன்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகு எலும்பு என்று தேர்தலின்போது கூறிய  பிரதமர் மோடி லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றியதோடு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்காததாலும், விவசாயிகளின் முதுகெலும்பை பிரதமர் மோடி  உடைத்துவிட்டார் என்பதற்காக குச்சி ஊன்றிக்கொண்டு விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/Trichyvision 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *