Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

விவசாயிகள் விளைப்பொருட்கள் வர்த்தக சட்டம்,விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான சட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய வேளாண் திருத்த சட்டங்கள் எதிர்கட்சிகளின் எதிர்ப்பிற்கிடையே நேற்று மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டங்கள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் எனவும்,ஏற்கனவே கடன்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து பிச்சை எடுக்க கூடிய நிலைக்கு செல்வார்கள் என கூறியும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *