Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலம் கணூரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடைபெரும் என ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில், திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் 20 ககும் மேற்பட்ட டிராக்டர்களில், 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்…. உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் பல்வேறு கட்டமான விசாரணைகளை நடத்தி அது குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

டெல்லியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ஜக்சித் சிங் டல்லேவால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவருடைய போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை வழங்கப்படும், குறிப்பாக நெல், கரும்புகளுக்கு விலையை உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளின் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டை பொருத்தவரை விவசாயிகளை பிச்சைக்காரன் போல் நடத்துகிறார்கள். குறிப்பாக TPC வங்கியிடம் விவசாயிகள் மானியத் தொகை கேட்டாலோ, கடன் கேட்க சென்றாலோ அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வாடிக்கையாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் விவசாயிகளின் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *