Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலைதழைகளை அணிந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இலை தழைகளை அணிந்து ஆதிவாசி போல திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

69 சதவீத இட ஒதுக்கீட்டை இல்லை எனக் கூறும் மத்திய அரசைக் கண்டித்தும், கொரோனா கால கட்டத்தில் காய்கறிகள் விலை வீழ்ச்சியை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னதாக சாலையில் இலைகளுடன் ஆதிவாசி போல் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனிமனித இடைவெளியுடன் போராட்டம் தொடங்கியது.

Advertisement

Write caption…

Start writing or type / to choose a block

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *